விஜய்யை வைத்து கட்டாயமாக படம் இயக்குவேன் – தனுஷ்

இன்றைய தமிழ் சினிமாவில் விளம்பரம் என்பது மிகப்பெரிய பங்களிப்பாக உள்ளது, ஒரு படத்திற்கு கதை எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியத்துவம் வாய்ந்தது விளம்பரம். அந்த வகையில் தற்போது நடிகர், நடிகைகள் அவர்களது படத்தின் விளம்பரத்திற்காக ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடுவது டிரண்டாகிவிட்டது சமீபகாலமாக, இன்று 8.30 மணியளவில் இருந்து 9 மணி வரை தனுஷ் அனேகன் படத்தின் விளம்பரத்திற்காக ரசிகர்களுடன் உரையாடினார். அந்த கேள்வி, பதில்களின் தொகுப்பு இங்கே, உங்கள் சினிமா வாழ்கையில் நீங்கள் மிகவும் சிரமப்பட்டு நடித்த கதாபாத்திரம் எது..?? ஷமிதாப், ஆடுகளம், புதுப்பேட்டை, மரியான். இரண்டு ஹீரோ கதாபாத்திரத்தில் எப்போது நடிப்பீர்கள்..?? யாருடன் நடிப்பீர்கள்.?? நல்ல கதையும், நேரமும் அமைந்தால் சிம்பு, சிவகார்த்திகேயன் சிறந்த நடிகர் விஜய்சேதுபதியுடன் நடிப்பேன். தெலுங்கில் உங்களுக்கு பிடித்த கதானாயகன் யார்…?? பவன் கல்யான் சார் அமிதாப்பச்சனுடன் நடித்த அனுபவம்…?? மறக்கமுடியாத அனுபவம், மிகச்சிறந்த நடிகர், மீண்டும் அவருடன் நடிக்க வேண்டும். அனேகன் படத்தில் நடிக்க காரணம்….?? நடிக்க வாய்ப்புள்ள கமர்சியல் படங்கள் அமைவது கடினம், இதில் அமைந்தது அதனால் நடித்தேன். ’அப்பனேண்ட் ஆளே இல்ல’ என்ற பாடல் வரி சிம்புவை குறிக்கிறதா..?? அப்படி இல்லை, அது படத்தின் கதை, நான் அப்படி எல்லாம் கூற அனுமதிக்க மாட்டேன் கே.வி.ஆனந்த் அவர்களை. என்னை அறிந்தால் படம் எப்படி..?? நான் இன்னும் படம் பார்க்கல, ஷமிதாப் மற்றும் அனேகன் படத்திற்கான புரோமோஷனில் பிஷியாக உள்ளதால், ஆனால் கேள்விப்பட்டேன் தல அசத்தியிருக்கார் மற்றும் ஸ்டைலிஷா இருக்கார்னு. சூர்யாவை பற்றி..??? ஸ்டைலிஷ் நடிகர், கடின உழைப்பாளி, மாஸ் படத்திற்கு வாழ்த்துகள். விஜய்யை வைத்து படம் இயக்குவீர்களா…??? எப்போது நான் இயக்குனர் ஆக தகுதியானவன் என தோன்றுகிறதோ அப்போது விஜய் அவர்களை இயக்க தயார், அவருக்கு என்னுடைய கதை பிடித்திருந்து, கால்ஷீட் கொடுத்தால் இயக்கத்தயார். விஜய் மூலமாக அனேகன் வாய்ப்பு கிடைத்தது எப்படி..??? கே.வி.ஆனந்த் விஜய்யிடன் கதை சொல்லியிருக்கிறார், அப்போது விஜய் என்னை பரிந்துரைத்திருக்கிறார். எப்போது புதுப்பேட்டை பார்ட் – 2..??? பேசிக்கொண்டிருக்கிறோம் கதை அமைந்தால் இயக்குவோம்…
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments :

Post a Comment